2026 ஆம் ஆண்டு கடமை நடவடிக்கைள்களை ஆரம்பிக்கும் நிகழ்வு
2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு வருட முதல் நாளாகிய ஜனவரி 01 ஆம் திகதியாகிய வியாழக்கிழமை கல்வி அமைச்சின் செயலாளர் திரு. ம. பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கல்வி அமைச்சு, மாகாணக் கல்வித் திணைக்களம் மற்றும் யாழ்ப்பாண வலயக் கல்வி அலுவலகம் என்பவனவற்றைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் கல்வி வளாகத்தில் காலை 8.30 மணிக்கு செயலாளரினால் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டதுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து யாழ்ப்பாணம் வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்களால் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர் நிகழ்வாக நாட்டிற்காக தமது உயிர்களை அர்ப்பணித்த சகலரையும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌனஅஞ்சலி செலுத்தப்பட்டது.அதன் பின்னர் சகல பதவியணி உறுப்பினர்களும் அரச சேவை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வின் இறுதியாக அமைச்சின் செயலாளர் அவர்களினால் ”தற்போதயை சவால்களை வெற்றி கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அரச கொள்கைகள் மற்றும் வேலைத் திட்டம் தொடர்பாகவும் மற்றும் குறித்த நோக்கத்தினை அடைந்துகொள்வதற்காக அரச ஊழிளர்களின் பங்களிப்பு” தொடர்பாக தெளிவுபடுத்தல்கள் வழங்கி குறுகிய உரை நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் உத்தியோகபூர்வ நிகழ்வு நிறைவுபெற்றதுடன் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது கடமைகளை உத்தியோபூர்வமாக ஆரம்பித்தனர்.


































