Print

"மார்பக புற்றுநோய்" தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார  அலகினால் ஒழுங்கு செய்யப்பட்ட "மார்பக புற்றுநோய்" தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கானது 2021.03.10 புதன்கிழமையன்று கல்வி அமைச்சின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் வைத்திய கலாநிதி ஆர் கேசவன் (Consultant Community Medicine) அவர்கள் வளவாளராக கலந்து சிறப்பித்தார். மேலும் கல்வி வளாக அலுவலகங்களான மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம், யாழ் வலயக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Hits: 2145