Print

மின் இணைப்பு மற்றும் வீட்டு மின்சுற்றுப் பயிற்சியினை பூர்த்தி செய்த பங்குபற்றுனர்களுக்கான உபகரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு  

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் இளைஞர் விவகார அலகின் அனுசரணையில், வடக்கு மாகாண தொழிற்துறை  திணைக்களத்தால்  2017ம் ஆண்டு நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நடாத்தப்பட்ட மின் இணைப்பு மற்றும் வீட்டு மின்சுற்றுப் பயிற்சியினை பூர்த்தி செய்த பங்குபற்றுனர்களுக்கான உபகரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு  19.03.2021 ந் திகதி 11 மணிக்கு நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், உதவி செயலாளர், கணக்காளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், பயிற்சியின் பயிற்றுவிப்பாளர், தொழிற்துறை திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.

 

Hits: 1199