Print

கோலூன்றிப் பாய்தலில், வடக்கின் நட்சத்திர வீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப்பதக்கம் 

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் 30.10.2021 கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

99ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பின் போட்டியில் 2ஆவது அத்தியாயத்தில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் பங்குகொண்ட யாழ். வீரர் அருந்தவராசா புவிதரன், தேசிய கோலூன்றிப் பாய்தல் சம்பியனான இஷார சந்தருவனை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.

விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், வடக்கின் நட்சத்திர வீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

இதில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்கரராகிய இஷார சந்தருவனை அவர் முதல் முறையாக வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இவரது வெற்றிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு அவரது வெற்றிக்கு தோள்கொடுத்த பெற்றோர், பயிற்றுவிப்பாளர் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

Hits: 1646