Print

“வாணர் படைப்புக்கள்” நூல் வெளியீட்டு விழா -2021

வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால்  பதிப்பிக்கப்பட்ட   “வாணர் படைப்புக்கள்” நூல் வெளியீட்டு விழா கல்வி அமைச்சின் மண்டபத்தில் 20.12.2021 ஆம் திகதி பி.ப 3.00 மணிக்கு வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு.இ. இளங்கோவன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர்  திரு.சி.திருவாகரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பேராசிரியர். அ.சண்முதாஸ் அவர்களும், முனைவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்து  சிறப்பித்தனர்.

பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரின் வரவேற்புரையுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்நூலுக்கான  வெளியீட்டுரையை தெல்லிப்பளை துர்க்கா தேவஸ்தானத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் வழங்கினார். அறிமுகவுரையை முன்னாள் இந்து நாகரீகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி.நாச்சியார் செல்வநாயகம் அவர்கள் வழங்கினார்கள். இணைப்பதிப்பாசிரியர் திரு.நா.நவராஜ் அவர்களின் நன்றியுரையுடன் இனிதே இந் நிகழ்வானது முடிவுற்றது.

Hits: 2427